Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் விலக்கு கோரி வந்த டூவீலர் பேரணியை குமாரபாளையம் நிர்வாகிகள் வரவேற்பு

நவம்பர் 23, 2023 10:28

குமாரபாளையம்: தமிழகம் முழுவதும்நீட் விலக்கு கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் திமுக இளைஞரணி சார்பில் கன்னியாகுமரியில் தொடங்கி  வாகன பேரணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்த வாகன பேரணிநீட் விலக்கு கோரி மாநிலம் முழுதும் பெரியார், அண்ணா, கலைஞர், வள்ளுவர் ஆகிய நான்கு மண்டல அணிகளாக பிரிக்கபட்ட டூவீலர் பேரணி பெரியார் மண்டல வாகன பேரணி குழு அதன் பொறுப்பாளர் சன் சுரேஷ் தலைமையில்  குமார பாளையம் வந்தடைந்தது.

இந்த வாகன பேரணி குழுவினரை குமாரபாளையம் தேசியநெடுஞ்சாலை பள்ளிபாளையம் பிரிவு சாலை  பகுதியில் தி.மு.க. நாமக்கல் மேற்க்கு மாவட்ட பொருளாளர் ராஜாராம் தலைமையில் தெற்கு நகரபொறுப்பாளர் ஞானசேகரன். மாநில செயற்குழு உறுப்பினர் ஓ.ஆர்.செல்வராஜன்.மற்றும் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள்  வரவேற்றனர்.

 மேலும் வாகன பேரணி குமாரபாளையம்  பெரியார் மண்டல அணியினர் 45 நபர்களும் குமாரபாளையம் நகர இளைஞரணியினை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களும் டூவீலர்களில் நேற்று குமாரபாளையம்  வந்தனர்.

இவர்களை கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

குமாரபாளையம் தி.மு.க. நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்று வரவேற்பு கொடுத்தனர். பள்ளிபாளையம் சாலை, சேலம் சாலை மற்றும் முக்கிய சாலைகளின் வழியாக சென்றனர். அந்தந்த மண்டல பகுதி பிரத்யேக இடத்தில் இந்த பேரணி நவ. 27ல் நிறைவு பெறவுள்ளது

தலைப்புச்செய்திகள்